அலி சப்ரி , இந்திய நிதியமைச்சா் சந்திப்பு

03.05.2023 15:22:58

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொரியாவின் சியோலில் இன்று (03) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது,   இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது  மற்றும்  இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார கூட்டாண்மை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.