100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி
24.08.2024 09:21:09
நூறு நாள் வேலை திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி காங்கிரஸ் தலையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வேலை உரிமையை உறுதி செய்யும் வகையில் 100நாள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இப்போது குறைந்த ஊதியம், நிச்சயமற்ற வேலை நாட்கள், வேலை அட்டை திடீரென ரத்தாவது என பல்வேறு சிக்கல்களுடன் 13 கோடி பேர் வேலை செய்வதாக விமர்சித்துள்ளார்.