விசித்திரமான வரியை விதித்த நியூசிலாந்து பிரதமர்..!

21.10.2022 11:40:50

நியூசிலாந்தில் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அதாவது, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார்.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் காரணமாக வெளியாகும் மீத்தேன் உமிழ்வை 10 சதவிகிதம் குறைக்கவும், 2050 க்குள் 47 சதவிகிதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்நிலையில், மாடுகள், ஆடுகள் போன்ற பண்ணை விலங்குகள் விடும் ஏப்பத்திற்கு, வரி விதிக்கும் திட்டம் ஒன்ரை முன் வைத்துள்ளார்.

நியூசிலாந்தில் மக்கள் தொகையை விட பண்ணை விவசாயத்திற்காக வளர்க்கப்படும் கால்நடை எண்ணிக்கைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விவசாயிகள் போராட்டம்