மஹிந்த இருக்கும் இடத்தை அறிவித்த பாதுகாப்பு செயலாளர்

11.05.2022 10:33:51

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் அவர் செல்ல விரும்பும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.