முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி முதல் சுற்றில் தோல்வி - டோக்கியோ ஒலிம்பிக்

25.07.2021 11:49:07

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

ஸ்பானிஷ் டென்னிஸ் வீராங்கனையான சாரா சோரிப்ஸ் டார்மோவுடன் பலப்பரிட்சை நடத்திய அவர் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

சாரா சோரிப்ஸ் டார்மோ பிரான்சின் பியோனா ஃபெரோ அல்லது லாட்வியாவின் அனஸ்தாசிஜா செவாஸ்டோவாவை அடுத்த சுற்றில் எதிர்கொள்ளவுள்ளார்.