பொ,ந செயலாளர் நாயகம் இலங்கை வந்தடைந்தார்.

01.02.2023 21:49:10

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட்  இன்று (01) நாட்டை வந்தடைந்தார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் உள்ளிட்ட மூவரடங்கிய தூதுக்குழுவை, கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.