வெடித்துச் சிதறி வரும் நிதிக்கட்டமைப்பு !
வங்கி கட்டமைப்பு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் நிதி கட்டமைப்பு வெடித்து சிதறி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன.
வங்கி கட்டமைப்பு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. நிதி கட்டமைப்பு வெடித்து சிதறி வருகிறது.
இதன் காரணமாக சில நாட்களுக்கு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்தும் அறிவிபபை அரசாங்கம் வெளியிட நேரிட்டது. இவற்றின் மூலம் நாட்டின் அபிவிருத்தி முற்றாக ஸ்தாபித்து போயுள்ளதை காண முடிகிறது.