பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

20.09.2021 13:20:30

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தெரிவித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

திறந்தவெளியில் கூட்டம் நடைபெறுவதையும், கொரோனா தடுப்பு விதி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.