கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவுக்கும் அதிக வசூலைப் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Acting& Theater
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும், அவரது அடுத்த திரைப்படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொலிவூட் தரப்புக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் அவருக்குள்ள மார்க்கெட் மதிப்பு காரணமாகவே, தயாரிப்பாளர்கள் அவருக்கு இந்த புதிய சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர்.
இந்த புதிய சம்பளத்துடன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘சூர்யா 48’ மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
எனினும், சூர்யாவின் சம்பள உயர்வு தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.