
மீள் திருத்த விண்ணப்ப காலம் நீடிப்பு!
27.05.2025 08:09:55
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பக் காலத்தை நீட்டிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆரம்ப காலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மீளாய்வு கோரிக்கைகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப அனுமதியை மே 28 முதல் மே 30, 2025 வரை மீண்டும் திறப்பதாக திணைக்களம் கூறியுள்ளது.