பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலாளராக டான் ஜார்விஸ் நியமனம்!
பிரித்தானியப் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஜார்விஸ் (Dan Jarvis), இராணுவத்திற்கான நிதியை அதிகரிப்பதில் அரசாங்கம் காலத்தின் தேவைக்கேற்ப துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான உள்நாட்டுப் பூசல் காரணமாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்தே, முன்னாள் இராணுவ அதிகாரியான டான் ஜார்விஸ் புதிய பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
” ஆயுதப் படைகளுக்குத் தேவையான அதிநவீன உபகரணங்கள் மற்றும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு எனக்கு உள்ளது எனவும் தற்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையிலும், இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துவதே எங்களின் முதன்மை சவாலாகும். எனவும் இதனைச் சாத்தியமாக்க அரசாங்கத்தில் உள்ள எனது சக அமைச்சர்களுடன் இணைந்து நான் தீவிரமாகப் பணியாற்றுவேன்.” எனவும் புதிய பாதுகாப்புச் செயலாளர் டான் ஜார்விஸ் கூறியுள்ளார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசாங்கத்தின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்’ அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) மாநாட்டிற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.