கடலோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!

02.07.2024 08:26:22

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.