மூன்றாவது முறையாக சீன அதிபராகிறார் ஜி -ஜின்பிங்
மூன்றாவது முறையாக சீன அதிபராகிறார் ஜி -ஜின்பிங்.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்திய உயர்நிலைக்குழு மாநாடு தலைநகர் பீஜிங்கில்,நடைபெற்றது. இதில் கட்சி முக்கிய பொறுப்பில் உள்ள 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சீன அதிராக இருக்கும் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு ஜி ஜின்பிங் சீன அதிபராக முதன்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து 2018-ல் இரண்டாவது முறையாகவும் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீன அரசியல் சாசனப்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவிவகிக்க முடியும். ஆனால், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் அந்த விதி நீக்கப்பட்டது. அப்போதே, இந்தச் சட்டத் திருத்தம் ஜி ஜின்பிங் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடாகவே கருதப்பட்டது.