மனோ – சம்பிக்க சந்திப்பு : கூட்டணி குறித்தும் ஆராய்வு!

01.03.2024 08:06:35

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் மனிதநேய கூட்டணியை அமைப்பது தொடர்பாக நாம் கடந்த வாரம் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.

இது தொடர்பாக நாம் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

அவர்கள் தமது இணக்கப்பாட்டை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

அந்தவகையில் இன்று நாம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்திருந்தோம்.

நாட்டை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடினோம்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.