பொதுமக்களிடம் உதவிகோரும் யாழ்.போதனா

12.07.2024 08:19:17

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக `O positive` இரத்த வகைகளுக்குத்  தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருதி வழங்கத்  தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் சென்று  இரத்த தானம் வழங்கி உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்  பிரிவினர் பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.