வடக்கு அரசியல்வாதிகள் மீது தனக்கு நல்ல மதிப்பில்லை

12.07.2024 08:25:55

வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது தனக்கு நல்ல மதிப்பொன்று இல்லை என சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (11) ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, நேர்காணலில் சாவகச்சேரி வைத்தியசாலை குறித்து இருக்கின்ற பிரச்சினைகள் அரசியல் தலைமைகளுக்கு தெரிந்தும் ஏன் அதை ஒருவரும் வெளிக்கொண்டு வரவில்லை என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் இதற்கு வைத்தியர் அர்ச்சுனா பதிலளிக்கையில், “குறித்த விவகாரம் தொடர்பாக பேசினால் மக்களுடைய ஆதரவு கிடைக்குமோ என்ற பயம் சிலருக்கு.

அத்தோடு, எங்களுக்குடைய அரசியல் சூழலுக்குள்ளே பல பிளவுகள் காணப்படுகின்றது.

இந்தநிலையில் மக்கள் பிரச்சினையை ஒருவரிடம் தனித்து கூறுவதில் யாருக்கும் நம்பிக்கை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.