
நாளை சுமந்திரன்- கஜேந்திரகுமார் கலந்துரையாடல்!
29.05.2025 08:49:22
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்த பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும் வாய் மூலமான பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமானதாகவும் அமைய வேண்டும் என சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். |