லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் நிறுவனங்களும் விலையை அதிகரித்தன!

31.05.2026 08:22:00

இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, அதற்கு இணையாக லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய தனியார் எரிபொருள் நிறுவனங்களும் தங்களது எரிபொருள் விலைகளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளன.

    

 

இவ் விலை மாற்றத்தின் போது, சினோபெக் நிறுவனம் தனது 'சூப்பர் டீசல்' (Super Diesel) விலையில் மாத்திரம் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. அந்நிறுவனம் தற்போதும் ஒரு லீட்டர் சூப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றது.

புதிய விலை அறிவிப்பின்படி, இதுவரை 410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லீட்டர் ஒக்டேன் 92 (Octane 92) ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 434 ரூபாயாகும்.

அதேபோல், இதுவரை 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீட்டர் ஒக்டேன் 95 (Octane 95) ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய சந்தை விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.