நாளை புலமைப்பரிசில் பரீட்சை

21.01.2022 11:47:52

2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை(22) நடைபெறவுள்ளது.

2,943 பரீட்சை நிலையங்களில் 340,508 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளரான அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.