மன்னாரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

13.10.2021 06:04:42

மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த வட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி உள்ளது.

இதன் காரணமாக குறித்த வட்டா ரக வாகனம் முழுமையாக எரிந்துள்ளதோடு,பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை வழங்கி விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.