மின்விசிறி விழுந்ததில் 3 வயது குழந்தை பலி

01.08.2021 08:56:38

மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 

காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாசல் வீதியில் உயிரிழந்த குழந்தையின், வீட்டிலிருந்தே  குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

முஹம்மத் ரிழ்வான் எனும் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் தாய், குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது குழந்தை படுத்து கிடந்ததாகவும், குழந்தையின் மீது வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதையும் அவதானித்துள்ளார்.

மேலும், குழந்தையை எழுப்பிய போது, குழந்தை எழுப்பாத நிலையில், அயலவர்களின் உதவியுடன் குழந்தையை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்திசாலையில் தெரிவித்ததாக தெரியவருகின்றது.

குறித்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.