உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணை

14.09.2021 06:33:25

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 25 சந்தேக நபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசார ணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.