இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு !

27.07.2021 01:09:34

 

மர்மமான முறையில் உயிரிழந்த இஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக இஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இஷாலியின் மரணம் மீது தமக்கு சந்தேகம் காணப்படுவதனால், சடலத்தை மீள தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைகளை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சடலம் மீது புதிய சட்ட வைத்திய அதிகாரியொருவர் விசாரணைகளை நடத்தி, அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என விசாரணைகளை நடத்தும் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இவ்வாறான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே, நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.