மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை தூக்கிலிட்டது
25.07.2022 11:14:03
பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர்.
பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.