யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

21.09.2021 06:04:58

யாழ்ப்பாணம், கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராசரத்தினம் நாகம்மா (வயது 80) என்பவரே உயிரிழந்தவராவார்.