கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி - இத்தாலி

05.07.2022 09:00:56

 

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

 

எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக 36.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, வறட்சி இத்தாலியின் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை அச்சுறுத்துகிறது. பல நகராட்சிகள் ஏற்கனவே குடிநீர் விநியோகத்தை அறிவித்துள்ளன.

குளிர்காலம் மற்றும் வசந்த காலம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான காலநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை வடக்கு இத்தாலியில் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரிக்கின்றன.