முடக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மக்களுக்கு உணவு வழங்கிய இராணுவம்!

29.07.2021 04:09:21

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் மதிய உணவுப்பொதிகள்நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சுகாதார பிரிவினருடன் இணைந்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.