நேட்டோவில் இணையும் சுவீடன்..

20.05.2022 11:03:03

நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

இரு நாடுகளும் இந்த வாரம் மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. இது ஐரோப்பிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.

கூட்டணியில் சேர, இரு நாடுகளுக்கும் 30 நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் நார்டிக் நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் மற்றும் ஃபின்னிஷ் பிரதமர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுவீடன் மற்றும் ஃபின்லாந்தின் விண்ணப்பங்களை ஐரோப்பிய பாதுகாப்பில் ஒரு முக்கியமான தருணம் என்று அழைத்தார்.

நேட்டோவில் புதிய உறுப்பினர்கள் சேருவது எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் அல்ல என்றும் அவர் கூறினார். உயர் வடக்கில் இரண்டு புதிய உறுப்பினர்களைக் கொண்டிருப்பது நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் குழு முழுவதும் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

நேட்டோவை அச்சுறுத்தலாகக் கருதுவதாக ரஷ்யா பலமுறை கூறியதுடன், அதன் விரிவாக்கத் திட்டங்கள் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் எச்சரித்துள்ளது.