ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு !

28.07.2021 10:14:49

 

இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது.

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதன்படி 26 விமானங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அவற்றில் 24 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் 9 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ரஃபேல் விமானங்களில் போர்த்திறன் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் மேலும் 36 விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.